என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை காசிமேடு"

    • காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.
    • கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் காசிமா வென்றார்.

    அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

    இந்நிலையில் கேரம் உலக கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகை காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


    கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.



     


    சென்னை காசிமேட்டில் விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் பெட்டிகளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    அட்டை பெட்டிகளை சோதனை செய்த போது அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. மேலும் அதில் மலேசிய முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.

    கடல் வழியாக நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த மர்ம கும்பல் அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×